ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்: அசத்தல் திட்டம் சென்னையில் தொடக்கம்!

குறைந்த எடை கொண்ட சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

வீ்ட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் ஏற்கெனவே கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வீட்டு உபயோகத்திற்கோ, வணிக பயன்பாட்டுக்கோ சிலிண்டர் இணைப்பு பெற வேண்டுமானால் அதற்கு இருப்பிட சான்று அவசியமாகிறது. கல்வி, வேலை மற்றும் தொழில் நிமித்தமாக ஊர் விட்டு ஊர் வந்து சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போரில் பலருக்கு முறையான முகவரி சான்று பெறுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவர்களது நலனை கருத்தில் கொண்டே குறைந்த எடையிலான சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை அமைச்சர்

ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் இரண்டு கிலோ, ஐந்து கிலோ சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியும். இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும், ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் செலுத்த வேண்டும்.

அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் காலியான பின்னர் நிரப்பப்பட்ட சிலிண்டரை பெற அதற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும். அதாவது சென்னையில் இந்த மாதம் இரண்டு கிலோ சமையல் எரிவாயு 250 ரூபாய்க்கும் ஐந்து கிலோ 575 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.