சென்னை: இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல; நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும், மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.