துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து – 22 பேர் பலி

அங்காரா,

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள மாகாணம் பர்டின். இந்த மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது.

இந்நிலையில், அந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

ஆனாலும், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்பும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.