சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சூரிய கிரகணத்தை கண்டுவியந்த மக்கள்..

அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தென்பட்டது.

சூரியன், சந்திரன், பூமி என மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனை சந்திரன் மறைப்பதால் நிகழும் சூரிய கிரகணம், இந்தியாவில் டெல்லி, லடாக், அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில், பகுதி கிரகணமாக தென்பட்டது.

அதேபோல், தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில், மாலை 5.14 மணிக்கு தொடங்கி, 5.45 வரை சூரியனின் 8 சதவீத பகுதி மட்டும் மறைந்து, கிரகணமாக தோன்றியது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் சூரிய கிரகணம் தென்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.