இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருகிராமில் 50 பிளாட்கள் கொண்ட குடியிருப்பு வளாகத்தை இடிக்க உத்தரவு..!

டெல்லியை அடுத்த நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குருகிராமில் குடியிருப்பு வளாக கட்டடம் இடிக்கப்பட உள்ளது.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு இக்குடியிருப்பில் ஒரு வீட்டில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில் 2 பேர் உயிரிழந்தனர். பத்து பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து கட்டடத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அந்த ஆய்வின் படி கட்டடம் குடியிருப்பதற்கான தகுதி இல்லாதது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் 50 பிளாட்டுகள் கொண்ட இந்தக் கட்டடத்தை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பவர்களுக்கு வேறு பிளாட்கள் தர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.