செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை:
செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய 754 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவலை சமூக ஆர்வலர் எம்.காசிமாயன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றிருக்கிறார்.

அதில், ‘கடந்த 2012 முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதாக 754 பேர் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.9,100 அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றும், அவர்கள் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.