இந்தியாவின் பிரபலமான டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது 36வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு கணவர் சோயிப் மாலிக் இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சானியா- சோயிப் மாலிக் காதல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் மற்றும் ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருவரும் தங்களது 5 மாத காதல் வாழ்க்கை தொடர்ந்து 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
உலக விளையாட்டு துறையில் நாடு விட்டு நாடு மலர்ந்த காதல் தம்பதியினருக்கு இஷான் என்ற மகன் ஒருவரும் உள்ளார்.
தீயாய் பரவிய விவாகரத்து வதந்திகள்
பாகிஸ்தான் மாடல் ஆயிஷா உமர் என்ற பெண்ணுடன் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நெருக்கம் காட்டியதால், காதல் ஜோடியான சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றதாக மாலிக்கின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதற்கேற்ப சானியாவின் ரகசிய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாஹ்வைக் காண!” என குறிப்பிட்டு பகிர்ந்து இருந்தார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
விவாகரத்து வதந்திகள் தீயாய் சமூக வலைதளங்களில் சுற்றி வந்த நிலையில், சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் ஜோடி பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சேர்ந்து தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒற்றை அறிவிப்பே அவர்களது ரசிகர்களை சந்தோஷத்தில் மூழ்கடித்தது.
இந்நிலையில், இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு அவரது கணவர் சோயிப் மாலிக் இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் சோயிப் மாலிக், “பிறந்தநாள் வாழ்த்துகள் சானியா மிர்சா, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற வாழ்த்துகிறேன், இன்று முழுவதும் சந்தோஷமாக இருக்குமாறும் வாழ்த்தியுள்ளார்”.