கே.எஸ்.அழகிரி ஏன் கன்னத்தில் அறைந்தார்? அட இதுதான் காரணமா?

தொண்டர்கள் மது போதையில்

கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மறித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியிலான கட்சி என்று நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்துள்ளார்

வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு மணிமண்டபத்தில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், “காங்கிரஸ் கட்சி வளர்ச்சி நன்றாக உள்ளது. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை ஆறு, ஏழு பேருந்துகளில் ஆட்களை அழைத்து வந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை போல் பண்ணி இருக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கைகலப்பு நடந்தது உண்மைதான். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியை மறித்ததால் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடியாட்கள் இருந்ததாக சொல்வது தவறான தகவல். ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்கள். அவரை நீக்குவது குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. ஜனநாயக ரீதியிலான கட்சி காங்கிரஸ் கட்சி.

தேர்தல் டிஆர்ஓ தலைமையில் நடைபெற்றுள்ளது. மது போதையில் கே.எஸ்.அழகிரியிடம் பேசியதால் அவர் கன்னத்தில் அடிப்பது போன்ற செயல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பலமாக இருப்பதால்தான் கோஷ்டி மோதல் நடைபெற்று அடிதடி நடைபெறுகிறது. இதனைப் பேசி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு நெருங்கிய நண்பர் ரூபி மனோகரன். அவரை நீக்க தீர்மானம் கொண்டு வர நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. அடுத்த கட்டமாக எம்எல்ஏவையும், மாவட்ட தலைவரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.