ஐக்கிய நாடுகள் (ஐ.நா) தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) பொறுப்பேற்கிறது.
இதனால் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது.
அடுத்த மாதம் 14 ஆம் திகதி இந்த சிலை திறக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் António Guterres மற்றும் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.