விஸ்தாரா – ஏர் இந்தியா விமான நிறுவனங்களை இணைக்கும் டாடா

புதுடெல்லி,

இந்தியாவின் தேசிய விமான நிறுவனத்தை வாங்கிய டாடா சன்ஸ் உடன் ,அதன் விஸ்டாரா முழு சேவை விமான நிறுவனத்துடன் இணைக்கிறது. இதற்கான கூட்டு முயற்சியை இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவின் 25.1% உரிமையாளராக செயல்படுவதாக விஸ்தாரா தெரிவித்துள்ளது. டாடா குழுமம் தற்போது விஸ்தாராவில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது, மீதமுள்ள 49 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம் உள்ளது.

இந்த செய்தியை ஏ.என்.ஐ செய்தி முகமை உறுதிப்படுத்தி உள்ளது.

ஏர் இந்தியாவை வாங்கியுள்ள டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்ற விமான சேவை நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், ஏர் இந்தியாவுடன், விஸ்தாராவை இணைப்பு குறித்து டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இதற்கு முன்பே தெரிவித்திருந்தது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மேலும், இந்த இணைப்பு அடுத்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் முடிந்துவிடும் என்பதையும் இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. இது விமான சேவைத் துறையில் மிகவும் முக்கியமான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.