கொடநாடு வழக்கு: ஜனவரி 27ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு 4 ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மீண்டும் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.

அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான் வாதிடுகையில், ‘‘வழக்கு விசாரணையை மேற்கொள்ள காலம் அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன், இவ்வழக்கின் விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.