திவ்யா ஸ்ரீதருக்கு வளைகாப்பு செய்த 'செவ்வந்தி' சீரியல் குழு

சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் 'கேளடி கண்மணி', 'மகராசி', 'கல்யாண பரிசு' ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். சிறிய இடைவேளைக்கு பின் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதருக்கும் அவரது கணவர் அர்னவுக்கும் இடையேயான பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருந்து வரும் சூழலில் அவருக்காக 'செவ்வந்தி' சீரியல் குழுவினர் மினி வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதன் வீடியோவை சக நடிகை ஷிவான்யா சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். முன்னதாக இதேபோல் 'மகராசி' சீரியல் குழுவினரும் திவ்யாவுக்கு வீட்டில் வைத்தே மினி வளைகாப்பை செய்திருந்தனர். காதலுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திவ்யாவுக்கு, இன்று கணவரின் ஆதரவும் கிடைக்கவில்லை. எனினும் அவரை சக நடிகர்கள் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை பார்த்து ரசிகர்களும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.