கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச வர்த்தக கடல் நடவடிக்கை மற்றும் நிதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா துறை போன்ற பல்வேறு சேவைகளுக்காக வரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கான வீசா வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரம் விசேட பொருளாதார வலையமாக செயல்படவுள்ளதுடன், சர்வதேச வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சேவைகளை வழங்க கூடியதாக செயல்படும் என்றார்.
இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு:
03. கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்தல்
கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்காணும் வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ‘முதலீட்டாளர் வீசா’ வகை
- சேவை வழங்குநர்களுக்கான ‘சேவை வழங்குநர் வீசா’ வகை
- கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ‘சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்’ வீசா வகை