சட்டவிரோத கட்டுமான பணி: நாகார்ஜூனாவுக்கு கோவா நோட்டீஸ்

பனாஜி: சட்டவிரோத கட்டுமான பணி தொடர்பாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு கோவா பஞ்சாயத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள மாண்ட்ரேம் பகுதியில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூன் கட்டுமான பணி நடத்தி வருகிறார்.

கோவா பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994ன் கீழ் மாண்ட்ரேம் பகுதியில் நடக்கும் கட்டுமான பணி சட்டவிரோதம் என்று பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த் நடிகர் நாகார்ஜூனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பஞ்சாயத்து முன் அனுமதி பெறாமல் இந்த கட்டுமான பணி நடப்பதாகவும், அதனால் இந்த பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் கோவா பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.