ஜம்முவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்முவின் புறநகர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற டிரக்கை காவலர்கள் சோதனை செய்த போது, அதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.