பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கே வந்து அவர் வாக்களித்தார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகமதாபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.