குஜராத்திலும் நிலநடுக்கம் பதிவானது


இந்தியாவின் – குஜராத் மாநிலத்தில் இன்று  நில அதிர்வு பதிவாகியுள்ளது.  

இன்று காலை  அங்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 அதிகாலை 12.52 மணியளவில் சூரத் நகரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் 5.2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

ஆராய்ச்சியாளரின் கணிப்பு

குஜராத்திலும் நிலநடுக்கம் பதிவானது | Earthquake In Gujarat

இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டிய கணித்த நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் பிரான்க், இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.