சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் “எந்தெந்த ரயில்கள் எந்தெந்த நடைமேடையில் வந்துசேரும் அல்லது புறப்படும்” என்ற குரல் அறிவிப்பு இன்று முதல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக குரல் அறிவிப்பு ஏதும் இல்லாத ‘சைலன்ட் ஜோன்’-னாக மாற்றும் முயற்சியை தென்னக ரயில்வே கடந்த 26-2-2023 முதல் அறிமுகம் செய்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ளது போல் பெயர்பலகைகள் மூலமும், பிரெய்லி வழிகாட்டி தகவல் பலகைகள் […]
