தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை.! வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஒருசில இடங்களில் நேற்றும், இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், தாம்பரம், சென்னை விமான நிலையம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. 

இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.