ரேடியோ ஆக்டிவ் சுனாமி… வடகொரியாவின் புதிய சோதனையால் பதற்றம்


கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா அறிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதம்

வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம்.
இது 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது .

ரேடியோ ஆக்டிவ் சுனாமி... வடகொரியாவின் புதிய சோதனையால் பதற்றம் | Nuclear Capable Underwater Drone

இதன்மூலம் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தினோம் . இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த சோதனையில் எந்தவிதமான ஆயுதத்தை வட கொரியா பயன்படுத்தியது என்பது தெரிவிக்கப்படவில்லை.

வட கொரியாவின் இந்த பரிசோதனை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

விலையை வட கொரியா கொடுக்க நேரிடும்

மேலும், இந்தப் பரிசோதனையை தென் கொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோல் தெரிவிக்கையில், இம்மாதிரியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கான விலையை வட கொரியா கொடுக்க நேரிடும் என்றார்.

ரேடியோ ஆக்டிவ் சுனாமி... வடகொரியாவின் புதிய சோதனையால் பதற்றம் | Nuclear Capable Underwater Drone

@AP

அமெரிக்க – தென் கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் மிகப் பெரிய ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஆயுத சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.