ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஒன்றிணைந்த வெளிநாட்டவர்கள் மத்தியில் இலங்கையின் ஆயர்வேத உற்பத்திகளை முன்னேற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிற ஜயகொடியின் தலைமையில் சுதேச வைத்திய அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.
விசேடமாக இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குறிக்கோளுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. அதற்கான தொழில்நுட்பம், இயந்திரங்கள் மற்றும் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளை அவர்களுக்கு முன்வைத்ததுடன் அதற்கு அவசியமான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜே ஐ ஊக்குவிப்பு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஆகியன தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்தன.
மேலும், ஜப்பானில் இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு மையங்களை நிறுவுவதற்கும், ஜப்பானில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களை தெளிவுபடுத்தி உள்நாட்டு மற்றும் ஆயுர்வேத உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும் மற்றும் பிரபலப்படுத்துவதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.