கேரளாவில் கிணற்றுக்குள் விழுந்த தமிழக தொழிலாளி… 5 மணி நேரமாக மீட்கப் போராடும் தீயணைப்புத்துறை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்சம் முக்கோலம் பகுதியில் கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் தமிழகத்தை சேர்ந்த மகாராஜன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது கிணற்றை சுத்தம் செய்யும் பணிக்காக மகாராஜன் கிணற்றில் இறங்கினார்.

அவர் இறங்கியதுமே கிணற்றில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் மகாராஜன் சிக்கி கொண்டார். இதனை பார்த்த கிணற்றின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் மகாராஜனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு வந்தாச்சு!

இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நடந்துள்ளது. மகாராஜனை உயிருடன் மீட்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். சுத்தம் செய்யும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தமிழக தொழிலாளி ஒருவர் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் குறித்த தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து அங்கு ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் கன மழை காரணமாக மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் இறங்கிய தொழிலாளி மண் சரிவால் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை மீண்டும் மிரட்டும் மூளை திண்ணும் அமீபா… 15 வயது சிறுவன் பலி.. பீதியில் உறைந்த மக்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.