மகளிர் உரிமைத் தொகை முகாம்: களத்தில் நேரடியாக இறங்கிய சிவ்தாஸ் மீனா

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாம்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் இத்திட்டம் வந்தாலும் இதை செயல்படுத்துவதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் பல்வேறு மட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு தலைவராக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த பணியை மேற்கொள்கின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம் தொப்பூரில் முகாமை தொடங்கி வைத்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று சென்னையில் நடைபெற்ற முகாம்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், சிந்தாதரிப்பேட்டை F1 காவல்நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை ஆய்வு செய்தார்.

கரூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் ரேஷன் கடை

அங்கு வருகை தந்த மக்களிடம் கலந்துரையாடி அவர்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்து அதன்படி விண்ணப்ப பதிவு நடைபெறுவதை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வார்டு-56, மண்ணடி, ஜீல்ஸ் தெருவில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விண்ணப்ப பதிவு மேற்கொள்ளும் தன்னார்வலர்களிடம் விண்ணப்பங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்திடும்படியும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.