மிரட்டும் காற்றழுத்த தாழ்வுநிலை… கொடைக்கானல் போலான சென்னை.. இன்னைக்கும் சம்பவம் இருக்காம்!

பருவமழை தீவிரம் அடைந்துள்ள வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. வடமாநிலங்ங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் தற்போது தென்னிந்தியாவில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது பருவமழை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கேரளா மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது.

கடந்த சில நாட்களாக சற்று ஓய்வு எடுத்த பருவமழை தற்போது மீண்டும் தென்னிந்தியாவில் அடித்து ஆட தொடங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலு ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை நல்ல மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

புதுச்சேரியில் கனமழை

இன்றும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தனியார் வானிலை அமைப்பான சென்னை ரெய்ன்ஸ் இன்றைய மழை நிலவரம் குறித்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் வளர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பரவலாக கனமழையைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இன்று சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூழல் சிறப்பாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய காற்றின் திசை அடிப்படையில், சென்னையில் மழை இன்று ஒரு ஹீரோவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.