கனடாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்… டெக்னாலஜி டூ ஆராய்ச்சி… ரெடியாகும் வேற லெவல் திட்டம்!

தமிழகத்தில் முதலமைச்சர்

தலைமையில் திமுக அரசு நடைபெற்று வரும் நிலையில், மாநில வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டமிடல் ஆகியவற்றுக்காக பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. கடந்த மே மாதம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். இதன்மூலம் 6,100 கோடி ரூபாய் முதலீடுகளும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்தன.

அண்ணாமலையும் பார்ப்போம், எவனையும் பார்ப்போம்? எம் ஆர் கே பன்னீர்செல்வம்

வெளிநாட்டு சுற்றுப்பயணம்

இவற்றை ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கழிவுநீர் சுத்திகரிப்பு, நீரேற்று திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து கள ஆய்வு செய்து தெரிந்து கொண்டார். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த வரிசையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்,

கனடாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தற்போது கனடா நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 30ஆம் தேதி ஒட்டாவா மாகாணத்திற்கு சென்றார். அங்குள்ள மேஜர் கில் பார்க் பூங்காவை பார்வையிட்டார். பூங்காவில் இருக்கும் புராதான சின்னங்களின் விவரங்கள், அங்கே பராமரிப்பில் எந்த வகையான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன, பூங்காவின் அமைப்பு, பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மரங்கள் மற்றும் பூச்செடிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

ஒட்டாவா மாகாணத்தில் ஆய்வு

இதையடுத்து ஜூலை 31ஆம் தேதி ஒட்டாவா மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்றார். இவரை கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா ஐஏஎஸ் வரவேற்றார். பின்னர் கனடா நாட்டின் விவசாய வளங்கள், அங்கு பயன்படுத்தப்படும் உயரிய வேளாண் உற்பத்தி தொழில்நுட்பங்கள், அங்கு அறுவடைக்கு பின்னர் செய் நேர்த்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி போன்றவை எடுத்துரைக்கப்பட்டன.

தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள்

மேலும் புதிய திட்டம் ஒன்றுக்கு வித்திடப்பட்டது. அதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் கனடா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேளாண் உத்திகளை கண்டறியும் வகையில் மாணவர்கள் பரிமாற்றம் செய்யப்பட உள்ளனர். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தரமான உரம் விநியோகிக்கும் வகையில் ஆராய்ச்சி செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

பயிரிடுதல் மற்றும் புதிய திட்டங்கள்

இதன் தொடர்ச்சியாக ஒட்டாவா மாகாணத்தில் கார்சொனோபி கிராமத்திற்கு சென்றார். அங்கு சோயா மொச்சை, மக்காச்சோளம், கோதுமை, ஓட்ஸ் பயிர்கள் மற்றும் பழ வகைகள் பயிரிடுவதையும் அமைச்சர் பார்வையிட்டார். இவற்றின் மூலம் தமிழக விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் நல்ல பல திட்டங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.