நடுவானில் சந்திரயான் 3 விண்கலத்தில் நாளை காலை நடக்கும் சம்பவம்… இஸ்ரோ முக்கிய அறிவிப்பு!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து படிபடியாக விலக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் தற்போது பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து முழுவதுமாக விலகி நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதையடுத்து நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் தொலைவை படிப்படியாக குறைத்து மாற்றி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிங்க் கலர் புடவையில் படு க்யூட்டாக விஜே மணிமேகலை…. அசர வைக்கும் போட்டோக்கள்!

இன்று நான்காவது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை குறைத்துள்ளது இஸ்ரோ. அதன்படி தற்போது 153 * 163 கி.மீ. ஆக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை முக்கிய பணியாக சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்ர் பிரிக்கப்படவுள்ளது.

உந்துவிசை கலன் எனப்படும் ப்ரபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் நாளை காலை பிரிக்கப்படவுள்ளது. அதன்பிறகு வரும் 20 ஆம் தேதி இந்த சுற்றுவட்டப்பாதை உயரம் 30 கிலோ மீட்டராக குறைக்கப்படவுள்ளது. இதுவரை சந்திரயான் 3 நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்து வரும் நிலையில் நாளை லேண்டர் மற்றும் ப்ரபல்ஷன் பிரிக்கப்படவுள்ளது இந்த பயணத்தின் முக்கிய பணியாக பார்க்கப்படுகிறது.

இந்த லேண்டர் வரும் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. நிலவில் இஸ்ரோ தயார் செய்துள்ள இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதும், அதிலிருக்கும் ரோவரை நிலவில் தரையிறக்கும் பணியை இஸ்ரோ மேற்கொள்ளும். ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட பிறகு ரோவர் அதன் பணியை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.