சென்னை: கோலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் திரையுலகில் 30 ஆண்டுகளை கடந்துவிட்டார். இப்போதும் இந்தியளவில் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வருவது ஏஆர் ரஹ்மான் தான். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகம் முழுவதும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், இசை நிகழ்ச்சிகளுக்காக ரெடியாவது குறித்து அவர் மனம் திறந்து பேசியது வைரலாகி வருகிறது.
