தர்மசாலா: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி ‛டாஸ்’ வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இன்று ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடக்கும் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெறும். ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, முகமது ஷமி, சூர்யகுமார் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி விபரம்:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் , ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement