நாகை: இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – மூவர் கைது..!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாலுவேதபதி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக வேட்டைக்காரனிருப்பு போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து வேட்டைக்காரனிருப்பு போலீஸார் மீனவர்கள் போல் மாறுவேடத்தில் கடற்கரைக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் நின்று  கொண்டிருந்த படகில்  இருந்த மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் ஓட்டி வந்த படகினை போலீஸார் சோதனை  செய்த போது, அதில் சுமார் 182 கஞ்சா பொட்டலங்கள்  இருந்தது தெரிய வந்துள்ளது.இதன்  மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் வரை இருக்கும் என்று போலீஸார் தரப்பில்  கூறப்படுகிறது. மேலும், போலீஸார் நடத்திய விசாரணையில் 364 கிலோ எடை கொண்ட கஞ்சாவை வேதாரண்யத்தில் இருந்து பைபர் படகு மூலம் கடற்கரை வழியாக  இலங்கைக்கு  கடத்த முயன்றது தெரிய வந்தது. மேலும், சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதாக  நாலுவேதபதி பகுதியை  சேர்ந்த சுகுமார், மகேந்திரன், வேளாங்கண்ணியை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 50 லட்சம் மதிப்பிலான 364 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகு ஆகியவை பறிமுதல் செய்து செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை நாகப்பட்டினம் எஸ்.பி ஹரிஷ் சிங் டி.எஸ்.பி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் சிறப்பாக செயல்பட்ட  வேட்டைகாரனிருப்பு போலீஸாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய  வேட்டைகாரனிருப்பு  போலீஸார், “நேற்று எங்களுக்கு நாலுவேதபதி கடற்கரையில்  சந்தேகப்படும்படி  படகு ஒன்று நிற்பதாகும், அதில் சட்ட விரோதமாக ஏதோ பொருள் கடத்தப்படுவதாகும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்  நாங்கள் மீனவர்கள் போன்ற  மாறுவேடத்தில் கடற்கரை பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த படகில் மூன்று பேர் சந்தேகத்திற்கு விதமாக இருந்தனர். அவர்களிடம்  விசாரணை நடத்திய போது அவர்கள்  மூவரும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

அவர்கள் இருந்த படகினை சோதனை செய்த போது, அதில் சுமார் 180 மூட்டைகளில் கஞ்சா இருந்தது. உடனடியாக நாகை மாவட்ட  போலீஸாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் வரை இருக்கலாம். இதை நாலு வேதபதியில் இருந்து  பைபர் படகு மூலம் கடற்கரை வழியாக, இலங்கைக்கு கடத்த முயன்றது  முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவர்களது  கூட்டாளிகள் யாரும் இது போன்ற கஞ்சா கடத்தல் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா  என்று கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.