டி.என்.பி.எல்.: திருச்சியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் .

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. நெல்லை தரப்பில் கடைசி ஓவரை வீசிய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அருண் கார்த்திக் மற்றும் சந்தோஷ் குமார் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

41(21) ரன்களில் இருந்தபோது அருண் கார்த்திக்கும், 45(35) ரன்களில் சந்தோஷ் குமாரும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஷ் 35(22) ரன்கள் அடித்து நெல்லை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.