சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு

தைபே நகரம்,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாக பிரிந்து சென்றது. அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை தூண்டுகின்றது. அதேபோல் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் சீனாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இதற்கிடையே அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவுக்கு ஆதரவாக சீனாவின் ஹவாய் டெக்னாலஜீஸ், சர்வதேச செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் போன்றவற்றை ஏற்றுமதி கட்டுப்பாடு பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் அந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யும் முன்பு அரசின் அனுமதியை பெற வேண்டும். அதேபோல் தலீபான், அல்-கொய்தா போன்ற அமைப்புகளும் இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.