ஆங்கிலத்துக்கு அதிக முக்​கியத்து​வம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அமித்ஷா பேசினார்: இபிஎஸ்

கேலி சித்​திரம் மூலம் அவதூறு பரப்​பும் திமுக​வுக்கு வரும் தேர்​தலில் மக்​கள் தக்க தண்​டனை வழங்​கு​வார்​கள் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:

கீழடி அகழாய்வு குறித்து முன்​னாள் அமைச்​சர் பாண்​டிய​ராஜன் தெளி​வாக விளக்​கம் அளித்​துள்​ளார். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மற்​றும் எனது தலை​மையி​லான அதி​முக அரசு, கீழடி அகழாய்​வுக்​காக மேற்​கொண்ட நடவடிக்​கைகளை முழு​மை​யாக தெரி​வித்​து​விட்​டோம். விரும்​பும் தெய்​வங்​களை வழிபடு​வது நமது உரிமை.

அந்த அடிப்​படை​யில், இந்து முன்​னணிசார்​பில் மதுரை​யில் முருக பக்த மாநாடு நடத்​தப்​படு​கிறது. ஆங்​கிலம் பேசுவோர் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா, அவரின் கருத்தை தெரி​வித்​துள்​ளார். தாய்​மொழி முக்​கி​யம் என்று கூறி​யுள்​ளார். தாய்​மொழிக்கு கொடுக்​கக் கூடிய முக்​கி​யத்​து​வத்​தை​விட ஆங்​கிலத்​துக்கு அதி​க​மாக முக்​கி​யத்​து​வம் கொடுக்​கின்​றனர் என்ற பொருளில்தான் அவர் கூறி இருக்​கிறார்.

தமிழகத்​தில் மக்​கள் விரோத திமுக ஆட்சி நடை​பெற்​றுக் கொண்டு இருக்​கிறது. இதை மடை​மாற்​றம் செய்​வதற்​காக கேலி சித்​திரம் மூலம் அவதூறு கருத்​துக்​களைப் பரப்​பு​கின்​றனர். 2026 தேர்​தலில் நிச்​ச​யம் இதற்கு மக்​கள் தண்​டனை வழங்​கு​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.