மதுரையில், இன்று இந்து முன்னணி சார்பில் ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. அதற்காக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. […]
