லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இருந்த போதிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியிருந்தாலும் பில்டிங் மற்றும் மோசமான பவுலிங் காரணமாக தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. ஒருபுறம் பும்ரா சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் யாருமே பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அளவிற்கு பந்து வீசவில்லை. இதன் காரணமாக ரன்கள் எளிதாக வர தொடங்கியது, இது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது.
மேலும் படிங்க: Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் டார்கெட் ஆக செட் செய்தது இந்திய அணி. ஐந்தாவது நாளில் 5 விக்கெட் மீதமுள்ள நிலையில் இந்த போட்டியை வென்றது இங்கிலாந்து. பென் டக்கெட் சிறப்பாக விளையாடிய 149 ரன்கள் அடித்தார். மூன்றாவது செஷனில் அடுத்தடுத்து சில விக்கெட்கள் விழுந்த போது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்று சிலர் எதிர்பார்த்தனர். இருப்பினும் ஜோ ரூட் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி என்னென்ன மாற்றங்கள் செய்ய உள்ளது என்று பார்ப்போம்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவது சந்தேகமே. காரணம் அவருக்கு அதிகமான வேலைப்பளுவை குறைப்பதற்காக இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை பும்ராவிற்கு 2வது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டால் அவருக்கு பதில் ஹர்ஸ்தீப் சிங் இடம் பெறுவார். அதே போல ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்தல் தாக்கூர் ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க வேண்டும். லோயர் ஆர்டரில் ரன்கள் அடிக்காததும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இதனால் அவருக்கு பதில் நிதிஷ்குமார் ரெட்டி இரண்டாவது டெஸ்ட்டில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதே போல தேவையான நேரத்தில் ஒரு பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கு குல்தீப் யாதவ் போன்ற ஒருவர் அணியில் கண்டிப்பாக தேவைப்படுகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் கருண் நாயரால் ரன்கள் அடிக்க முடியவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லை என்றால் சிராஜ் சீனியர் பவுலராக இருந்து நல்ல லைன் அன் லென்த்தில் பந்து வீச வேண்டும். பிரசித் கிருஷ்ணா முதல் டெஸ்டில் சிறப்பாக பந்து வீசாததால் அடுத்த போட்டியில் ஹர்ஷித் ராணா அல்லது ஆகாஷ் தீப் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.
மேலும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன் – முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு!