இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி 24ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் வீரர்கள் சதம் அடுத்தடுத்து சதம் அடித்த நிலையில், இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி ரன்களை குவித்து அபார வெற்றியை பெற்றது.
இதனால் ஏமாற்றம் அடைந்த இந்திய ரசிகர்கள் வரும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறம் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். இது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய அணியின் பந்து வீச்சை ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவுக்கு உதவியாக மற்ற பந்து வீச்சாளர்கள் இல்லை என்றும், அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பிரஷித் கிருஷ்ணாவையும் பலரும் கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில், முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா இரண்டாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாகவும், பிரஷித் கிருஷ்ணாவை இரண்டாவது போட்டியில் நீக்கப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் இரண்டாவது போட்டியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பயிற்சியில் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் இவர்கள் இரண்டு பேருடனும் ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே இவர்கள் 2வது டெஸ்டில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னாதாக ஆகாஷ் தீப் நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பாகவே பந்து வீச்சி இருந்தார். தற்போது பிரசித் கிருஷ்ணா முதல் டெஸ்ட்டில் சொதப்பிய நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் பும்ராவுக்கு ஓய்வு தேவை என்பதால், அர்ஷ்தீப் சிங் அணிக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால், அவர் நிச்சயம் அணியில் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி பிரிமிங்ஹாம் மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி அங்கு சென்று பயிற்சிகளை செய்து வருகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக பந்து வீச்சு தான் பார்க்கப்படுகிறது. எனவே பந்து வீச்சை சரி செய்யும் முயற்சியில் நிச்சம் இந்திய அணி ஈடுபட்டிருக்கும். எனவே வரும் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: சஞ்சு சம்சனுக்காக 2 வீரர்களை விட்டுக் கொடுக்கும் சிஎஸ்கே! தோனி தான் காரணம்?
மேலும் படிங்க: IND vs ENG: கம்பீர் தலையின் மேல் தொங்கும் கத்தி? 2வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்!