ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானம் குறித்து காங்கிரஸ் மீண்டும் கேள்வி

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடந்த மே மாதம் நடை​பெற்ற போரில் இந்​திய விமானப்​படை​யில் எத்​தனை போர் விமானங்​கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்​டும் என மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் கேள்வி எழுப்பினார்.

முப்​படை தளபதி ஜெனரல் அனில் சவு​கான் ஏற்​கெனவே அளித்த பேட்​டி​யில், ‘‘இந்​தி​யா​வின் 6 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது என பாகிஸ்​தான் கூறு​வது முற்​றி​லும் தவறான தகவல். தாக்​குதல் உக்​தி​களில் ஏற்​பட்ட தவறுகளை சரிசெய்​து, அனைத்து வகை விமானங்​களை​யும் பயன்​படுத்தி பாகிஸ்​தானின் தொலை​தூர பகு​தி​களில் துல்​லிய தாக்​குதல் நடத்​தினோம்’’ என்​றார்.

இந்​நிலை​யில் இந்​தோ​னேஷி​யா​வில் சிறப்பு பணிக்கு அனுப்​பப்​பட்ட இந்​திய கடற்​படை கேப்​டன் சிவ குமார் என்​பவர் சமூக ஊடகத்​தில் விடுத்த செய்​தி​யில், ‘‘பாகிஸ்​தான் மீதான தாக்​குதலில், அரசி​யல் தலை​மை​யின் கட்​டுப்​பாடு காரண​மாகத்​தான், இந்​திய விமானப்​படை போர் விமானங்​களை இழந்​தது’’ என கூறி இருந்​தார்.

இதை மேற்​கோள் காட்​டி​யுள்ள காங்​கிரஸ் மூத்த தலை​வர் பவன் கெரா, ‘‘இந்​தோ​னேஷி​யா​வுக்​கான இந்​திய பாது​காப்​புத்​துறை அதி​காரி மற்​றொரு அதிர்ச்சி தகவலை வெளி​யிட்​டுள்​ளார். உண்மையில் இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது?
இந்த விவ​காரம் குறித்து சிறப்பு நாடாளு​மன்ற கூட்​டத்தை கூட்டி விவா​திக்க வேண்​டும் என்ற எங்​களின் கோரிக்​கையை அரசு தவிர்த்​த​து. பாது​காப்பு விஷ​யத்​தில் சமரசம் செய்​யப்​பட்​டதை அவர்​கள் அறிவர். இதை காங்​கிரஸ் வெளிப்​படுத்​தும்​ என அரசு பயப்​படு​கிறது’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.