பெக்கன்ஹாம்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நாளை தொடங்க உள்ளது.
ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அதே சமயம் சொந்த மண்ணில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து முயற்சிக்கும் என்பதால் இந்த போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.