புகார் மனு அளிப்பதுபோல் வந்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

புதுடெல்லி: குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று நடத்​தி​னார். அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் முதல்​வரிடம் புகார் மனு அளிக்க வந்​தார்.

அவரை காவலர்​கள் சோனை செய்து அனுப்​பினர். மனு அளிக்க முதல்​வர் ரேகா குப்​தாவை நெருங்​கிய அவர் சிறிது நேரம் பேசி​னார். பின்​னர் முதல்​வரை திட்​டிய அவர் திடீரென அவரை கன்​னத்​தில் அறைந்​தார். முதல்​வரை தள்​ளி​விட்​டபின், அவரது தலை முடியை பிடித்​தும் இழுத்​தார். அதற்​குள் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்​கினர். அவர் உடனடி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உறவினர் ஒரு​வரை டெல்லி போலீ​ஸார் கைது செய்​திருந்​த​தாக​வும், அதற்​காக உதவி கேட்டு அவர் டெல்லி முதல்​வரை சந்​திக்க வந்​தார் என சிலர் கூறுகின்​றனர். சிசிடிவி காட்​சிகளை ஆராய்ந்​த​தில், அவர் முதல்​வர் இல்​லத்​துக்கு முதல் நாளே வந்து அங்​குள்ள பகு​தியை ஆய்வு செய்து வீடியோ எடுத்​துள்​ளார். எனவே இது திட்​ட​மிட்ட தாக்​குதல் என தெரிய​வந்​துள்​ளது. அந்த வீடியோ காட்​சிகள் போலீஸ் விசா​ரணைக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த தாக்​குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவுக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர். இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் ஹரிஸ் குராணா கூறுகை​யில், ‘‘இந்த தாக்​குதலை நாங்​கள் கண்​டிக்​கிறோம். இந்த தாக்​குதல் அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டதா என விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார். டெல்லி அமைச்​சர் மன்​ஜிந்​தர் சிங் சிர்ஷா கூறுகை​யில், ‘‘முதல்​வரின் பணி​களை எதிர்க்​கட்​சி​யின​ரால் பொறுத்​துக்​கொள்ள முடிய​வில்​லை.

இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் யார் இருக்​கின்​றனர் என விசா​ரிக்க வேண்​டும்’’ என்​றார். இந்த தாக்​குதலுக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள டெல்லி முன்​னாள் முதல்​வரும், ஆம் ஆத்மி தலை​வரு​மான ஆதிஷி கூறுகை​யில், ‘‘ஜனநாயகத்​தில் வன்​முறைக்கு இடமில்​லை. டெல்லி முதல்​வர் ரேகா குப்​தா​வின் மீதான தாக்​குதல் மிகுந்த கண்​டனத்​துக்​குரியது. குற்​ற​வாளி​கள் மீது டெல்லி போலீ​ஸார் கடும் நடவடிக்கை எடுப்​பர் என நம்​பு​கிறேன்’’ என்​றார்.

நாய்​களை நேசிப்​பவ​ரா? – தாக்​குதல் நடத்​திய ராஜேஷ் சக்​ரி​யா​வின் தாய் பானு கூறுகை​யில், ‘‘எனது மகன் ராஜேஷ் நாய்​களை நேசிப்​பவர். டெல்​லி​யில் தெரு​நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் அடைக்க உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் அளித்த உத்​தர​வால், ராஜேஷ் கோபம் அடைந்​தார். இதையடுத்​து​தான் அவர்​ டெல்​லி சென்​றார்​’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.