வண்டலூர் அருகே கண்டிகை ஏரியில் ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கண்​டிகை ஏரியை முறை​யாக அளவீடு செய்து ஆக்​கிரமிப்​பு​களை 3 மாதங்​களில் அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் நந்​திவரம் கூடு​வாஞ்​சேரி பகு​தி​யைச் சேர்ந்த பி.​பாஸ்​கர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறியிருந்ததாவது: வண்​டலூர் அருகே உள்ள கண்​டிகை ஏரி 11.4 ஏக்​கர் பரப்பு கொண்​டது. இந்த ஏரி​யில் பெரும்​பாலான பகுதி ஆக்​கிரமிக்​கப்​பட்டு தற்​போது 5 ஏக்​கர் மட்​டுமே நீர்​நிலை​யாக உள்​ளது. அரசி​யல் செல்​வாக்​குமிக்க நபர்​கள் நீர்​நிலையை தாங்​கல் புறம்​போக்கு எனக்​கூறி பட்டா பெற்று வரு​கின்​றனர்.

ஏற்​கெனவே இந்த ஏரியை முழு​மை​யாக அளவீடு செய்​து, நீர்​நிலையை மீட்க கோரிக்கை விடுத்​தும் அதி​காரி​கள் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. எனவே இந்த ஏரி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி நீர்​நிலையை மீட்க உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு அவர் மனுவில் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி எம்.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் பி.ஜெகந்​நாத் ஆஜராகி, தொன்​மை​யான இந்த கண்​டிகை ஏரியை நம்​பித்​தான் அப்​பகு​தி​யில் விவ​சாய பணி​களும், குடிநீர் தேவை​யும் பூர்த்தி செய்​யப்​பட்டு வந்​தது. ஆனால் இந்த ஏரி தற்​போது முழு​மை​யாக ஆக்​கிரமிக்​கப்​பட்​டு, சுற்​று​வட்​டார பகு​தி​களின் கழி​வுநீர் மைய​மாக மாறி வரு​கிறது.

ஏரியை சுற்றி நூற்​றுக்​கணக்​கான வீடு​கள் ஆக்கிரமிப்​பில் உள்​ளன என்​றார். அதையடுத்து நீதிப​தி​கள், கண்​டிகை ஏரியை முறை​யாக அளவீடு செய்து அதில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை 3 மாதங்​களில் அகற்றி அதுதொடர்​பான விவரங்​களை அறிக்​கை​யாக சமர்ப்​பிக்க வேண்​டும். மேலும், இதுதொடர்​பாக மனு​தா​ரருக்​கும் தகவல் தெரி​வி்க்க வேண்​டும், என உத்​தர​விட்டு வழக்கை முடித்​து வைத்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.