பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் மேல்முறையீடு

பெங்களூரு: ​முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்​பெண்​ணுக்கு பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம், கடந்த மாதம் அவருக்கு சாகும் வரை சிறை தண்​டனை​யும் ரூ.10 லட்​சம் அபராத​மும் விதித்து உத்​தர​விட்​டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்​பில் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்யப்​பட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: எனது வீட்டு பணிப்​பெண் போலீ​ஸாரின் தூண்​டு​தலின்​பேரில் என் மீது பாலியல் புகார் அளித்​தார். சம்​பந்​தப்​பட்ட பெண் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​ட​தாக கூறி​யுள்​ளார்.

இதையடுத்து போலீ​ஸார் அந்த பெண்ணை 2024 மே 10-ம் தேதி எனது பண்ணை வீட்​டுக்கு அழைத்து சென்று படுக்​கையை காட்டினர். அதில் கறை இருந்​த​தால் குற்​றம் உறுதி செய்​யப்​பட்​ட​தாக போலீ​ஸார் கூறி​யுள்​ளனர்.

3 ஆண்டுகளாக கறையிருக்க வாய்ப்பில்லை. எனவே கீழமை நீதி​மன்​றம் வழங்​கிய சாகும் வரை சிறை தண்​டனை, ரூ.10 லட்​சம் அபராதம் ஆகிய​வற்றை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு மனு​வில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த மனு தசரா விடு​முறைக்​கு பின்​பு வி​சா​ரணைக்​கு வரும்​ என்று எதிர்​​பார்​க்​கப்​படு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.