கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுகவுக்கு ஏன் அவ்வளவு வேகம்? – இந்து முன்னணி கேள்வி

சென்னை: கோ​யில் சொத்​துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்​டு​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கோயிலுக்​குச் சொந்தமான இடங்​களில் கல்​லூரி தொடங்க அனு​ம​திக்​கும் மசோ​தாவை தாக்​கல் செய்து தமிழக அரசு அவசர அவசர​மாக நிறைவேற்றி உள்​ளது.

திமுக ஆட்​சிக்கு வந்த பிறகு, கோயில் நிதி, கோயில்​களுக்​குச் சொந்​த​மான தங்க நகைகள், இடங்​கள் திட்​ட​மிட்டு அழிக்கப்படுகின்றன. கோயில் சொத்​துகளை கபளீகரம் செய்​வ​தில் திமுக ஏன் அவ்​வளவு வேகம் காட்​டு​கிறது? ‘சனாதன இந்து தர்மத்தை அழிப்​பதே எங்​கள் கொள்​கை’என்று துணை முதல்​வர் உதயநிதி கூறி​னார்.

அரு​கில் இருந்து அதை கைதட்டி வரவேற்​றவர் இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு. அந்த கொள்​கையை மறை​முக​மாக நிறைவேற்​றவே கோயில் சொத்​துகளை அழிக்க இத்​தகைய திட்​டங்​களை வகுக்​கிறார். இந்த மசோதா சட்​ட​விரோதமானது. இதை ஏற்​கக் கூடாது என்று ஆளுநர் ஆர்​.என்​.ர​வியை சந்​தித்து மனு அளிப்போம். இந்த மசோ​தாவை திரும்​பப் பெற வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.