மகளிர் உலகக்கோப்பை: இலங்கை – பாகிஸ்தான் ஆட்டம் 34 ஓவர்களாக குறைப்பு

கொழும்பு,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.

இந்நிலையில், லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமீரா அதபது பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்தது. ஆனால் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது . இந்த நிலையில் மழை நின்றதால் சில மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.