சென்னை: ஜனவரியில் பொங்கல் பண்டிகையின்போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பல லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். ஜன.12-ம் தேதி திங்கள்கிழமையும் விடுப்பு கிடைக்கும் சூழல் உள்ளவர்கள், 9-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்பட திட்டமிடுவார்கள்.
விரைவு ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், ஜன.9-ம் தேதி பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறிய தாவது: ரயில் பயணத்துக்கு 60 நாட்கள் முன்பு முன்பதிவு செய்ய முடியும் என்பதால், மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நவ.13, 14-ம் தேதிகளில் அதிகம் பேர் முன் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஜன. 17, 18-ல் திரும்புவோர் வரும் 18, 19-ம் தேதியன்று முன்பதிவு செய்வார்கள்.
காத்திருப்போர் பட்டியல், பயணிகள் தேவையை கருதிகூடுதல் பெட்டிகளை இணைக்கநடவடிக்கை எடுக்கப்படும். டிசம்பர் இறுதியில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.