கொரோனா விதி மீறிய விவகாரம் சூடு பிடிக்கிறது – இங்கிலாந்து நீதித்துறை மந்திரி திடீர் ராஜினாமா

லண்டன், இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்தன. பொதுஇடங்களில் மக்கள் கூடவும், விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லண்டன், எண், 10, டவுனிங் வீதியில் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இது வெளியே அம்பலத்துக்கு வந்தது. இதை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. ‘பார்ட்டி கேட்’ (விருந்து ஊழல்) … Read more

விலைவாசி உயர்வுக்கு உலக நிலவரமே காரணம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி

புதுடெல்லி,  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷியா-உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட உலக நிலவரம்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி இருக்கிறோம். நம்மிடம் போதுமான உணவு தானியம் இருக்கிறது. அதனால்தான், நமது உணவு கையிருப்பை உலக நாடுகளுக்கு வழங்க … Read more

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்தியாவில் 3 நகரங்களில் நடக்கிறது

மும்பை,  பெண்களுக்கான 7-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் புவனேஸ்வர், கோவா, நவி மும்பை ஆகிய நகரங்களில் அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணிகள் யார்-யாருடன் மோதுவது என்பது ஜூன் 24-ந்தேதி ஷூரிச்சில் நடைபெறும் குலுக்கலில் (டிரா நிகழ்ச்சி) முடிவு செய்யப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த போட்டியில் இந்தியா, பிரேசில், சீனா, சிலி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனத்தை மூட முடிவு..!

மாஸ்கோ, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், ரஷியாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து போர் நடத்தி வருகிறது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், ரஷியாவில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது ரஷிய அலுவலகத்தை மூட முடிவு … Read more

"ஓட்டல்களில் தங்கக்கூடாது; உறவினர்களை உதவியாளராக நியமிக்கக்கூடாது" – உ.பி. மந்திரிகளுக்கு யோகி ஆதித்யநாத் கிடுக்கிப்பிடி

லக்னோ, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:- உத்தரபிரதேச மந்திரிகள், அரசுமுறை பயணமாக வெளியூர் செல்லும்போது, ஓட்டல்களில் தங்கக்கூடாது. விருந்தினர் விடுதிகளில்தான் தங்க வேண்டும். அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மந்திரிகள், தங்கள் உறவினர்களை தனி உதவியாளர்களாக நியமிக்கக்கூடாது.  அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை … Read more

பெண்கள் கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்..!

சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியை நடத்துகிறது.  இந்த போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி., ஐ.சி.எப்., தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், ஜி.கே.எம்., பாரதியார் ஆகிய 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் … Read more

பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது காங்கிரசை புறக்கணிப்பது சரியல்ல – சரத்பவார் கருத்து

மும்பை,  மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அவர், எதிக்கட்சிகள் ஆளும் முதல்-மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “நாட்டின் அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான பா.ஜனதாவின் நடவடிக்கைகள் குறித்து, வேதனையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். பா.ஜனதாவை எதிர்த்து போராடவும், நாட்டில் தகுதியான அரசு அமையவும் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும். … Read more

"இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவுக்கு வரும்" – ப.சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை, தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் வரும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்.  வந்துவிட்டது என்று கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்’ என்று அவர் கூறினார்.

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற தமிழக அணிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்-அமைச்சர்..!

சென்னை,  தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிகளுக்கு ரூ.42 லட்சம் ஊக்கத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடன் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி தமிழக அணி 11-வது … Read more

அமெரிக்காவில் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

நியூயார்க், அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 10 பேரும், சம்பவத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் வரை காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. எனினும், துப்பாக்கிச்சூடு யார் நடத்தியது என்ற விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், புரூக்ளின் மெட்ரோ சுரங்க பாதையில் துப்பாக்கிச்சூடு … Read more