பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்தியாவில் 3 நகரங்களில் நடக்கிறது

மும்பை, 
பெண்களுக்கான 7-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் புவனேஸ்வர், கோவா, நவி மும்பை ஆகிய நகரங்களில் அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணிகள் யார்-யாருடன் மோதுவது என்பது ஜூன் 24-ந்தேதி ஷூரிச்சில் நடைபெறும் குலுக்கலில் (டிரா நிகழ்ச்சி) முடிவு செய்யப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.
இந்த போட்டியில் இந்தியா, பிரேசில், சீனா, சிலி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.