புரோ ஹாக்கி லீக் : இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

புவனேஷ்வர், 9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.  இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.இந்நிலையில் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்ட்டது . இதில் 3-2 என்ற கோல் … Read more

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா, ஒமைக்ரானை விட வேகமாக பரவும்- உலக சுகாதார அமைப்பு

லண்டன், சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக  கொரோனா வைரஸ் கடந்த 2019- ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு, முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது … Read more

பிரதமர் மோடி, மோரீசன் முன்னிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு உள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், சந்தை வாய்ப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே இண்ட்ஆஸ் எக்டா என்று அழைக்கப்படுகிற இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவாகி இருந்தது. அதன்படி பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் முன்னிலையில் காணொலி காட்சி வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக மந்திரி … Read more

3-வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

லாகூர், பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான   மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது 67 ரன்களில் 5 விக்கெட் இழந்து தடுமாறியது  ஆஸ்திரேலிய அணி.அந்த அணியில் அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்ததார் .இறுதியில் 41.5 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து … Read more

உக்ரைன் போர்: கீவ் அருகே ஒரேதெருவில் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி…!!

புச்சா,  உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கிய நிலையில் பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டதோடு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷியா ஒரு புறம் கூறினாலும் மற்றொருபுறம் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இது வரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் போர் … Read more

தேசிய மகளிர் ஆணையத்தால் புதிதாக மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடக்கம்!

புதுடெல்லி, பெண்கள் மற்றும் சிறுமிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மனிதக் கடத்தல் தொடர்பான வழக்குகளை இன்னும் திறம்பட கையாள்வதற்காகவும்,  மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது. சட்ட அமலாக்க அலுவலர்கள் இடையே அதிகளவு விழிப்புணர்வை ஏற்படுத்தவதும் அவர்களது திறனை வளர்ப்பதும் இந்த பிரிவின் நோக்கமாகும்.  இதன்மூலம், காவல் அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளிடையே பிராந்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பாலியல் விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்படும்.  மேலும்,  மனிதக் கடத்தலை தடுப்பதற்கான பயிலரங்குகளையும் … Read more

ஐ.பி.எல் 2022: டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்று வருகிற  10 -வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் -டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய குஜராத் அணியில்  தொடக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் … Read more

தென்கொரியாவில் புதிதாக 2.64 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வந்தது.  இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: அரியானா அரசு

அரியானா, நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்துள்ளது. இதன்  காரணமாக பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தியுள்ளது. இதில் முக்கியமாக பொது முகக்கவசம் அனிவது கட்டாயமில்லை என்று மராட்டியம் மற்றும் டெல்லி அரசுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டன. இந்த நிலையில் அரியானா அரசும் தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் : முதல் இன்னிங்க்சில் வங்காளதேச அணி 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

டர்பன், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும்  முதல் டெஸ்டில் மோதி வருகிறது.   இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கரும், சரல் எர்வீயும் களமிறங்கினர். எல்கர் 67 ரன்களில் அவுட்டானார். சரல் எர்வீ 41 ரன்களில் வெளியேறினார். கீகன் பீட்டர்சன் 19 ரன்னிலும், ரியான் … Read more