'குஜராத் முதல்வராக இருந்தபோது பேசிவிட்டு பிரதமரானதும் மறந்தது ஏன்?' – மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

குமரி: “திருக்குறளைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் பிரதமர் மோடி, திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கிறார்” என்று குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “மழை – வெள்ளம் காரணமாக, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பெரும்பாதிப்பை அடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று உடனடியாக நான் நேரில் வந்து பாதிப்புகளை ஆய்வுசெய்தேன். வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த … Read more

பிப்ரவரி 24-ம் தேதி நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2017-ம் ஆண்டு மே மாதம் அவர்மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு பல முறை உத்தரவு பிறப்பித்தது. தற்போது இதுவே கடைசி வாய்ப்புஎன்றும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடியவர் விஜய் மல்லையா. இவரை … Read more

கூகுள் சேவைகளைத் தொடர்ந்து வாட்ஸ் அப் சேவையும் பாதிப்பு

ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப் செயலி பயன்பாடு வியாழக்கிழமை அன்று பாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் பல பயனர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளனர். முன்னதாக வியாழக்கிழமை காலை அன்று கூகுளின் ஜிமெயில், ட்ரைவ் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. வியாழனன்று மாலை வாட்ஸ் அப் செயலி முடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர். இது குறித்துக் கூறியுள்ள தொழில்நுட்ப இணையதளம் ஒன்று, “சில பயனர்களுக்கு வாட்ஸ் … Read more

மதவெறியைத் தடுக்க கிராமங்களில் சமூகநீதிக் குழுக்கள் உருவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

விருத்தாசலம்: கிராமங்களில் மதவெறி தூண்டப்பட்டு வருவதால் அரசே சமூகநீதிக் குழுக்களை உருவாக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று கடலூர் வந்திருந்தபோத செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நீட் விலக்கு மசோதாவை தமிழக முதல்வர் நிறைவேற்றி வரலாறு நிகழ்வை ஏற்படுத்தி உள்ளார். ஒத்திசைவு பட்டியலில் உள்ள பொருள் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றினால் என்னவாகும் என்ற விவாதம் தற்போது … Read more

காதலுக்கு எல்லை இல்லை: காதலர் தினத்தில் கரம் பிடிக்கும் திருநங்கை – திருநம்பி ஜோடி

திருவனந்தபுரம்: திருநங்கை சியாமா பிரபாவுக்கும், திருநம்பி மனு கார்த்திகாவுக்கும் காதலர் தினத்தன்று வரும் 14-ம் தேதிதிருமணம் நடக்கிறது. காதலித்து கைப்பிடிக்கும் இந்த ஜோடி, திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முயன்று வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட திருநம்பி மனுகார்த்திகா (31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். இதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட … Read more

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய மொபைல் அறிமுகம்: விலை ரூ.1,599

உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் அம்சங்களுடன் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. பல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த மொபைலின் விலை ரூ. 1,599. அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் மொபைல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும். 2.4 இன்ச் திரையுடன் இருக்கும் இந்த மொபைலில் 32 ஜிபி வரை கொள்ளளவை மெமரி கார்ட் கொண்டு விரிவாக்கிக் கொள்ளலாம். எஃப்.எம் ரேடியோ மற்றும் இரண்டு சிம் வசதிகளையும் கொண்டுள்ளது. 1800எம்.ஏ.ஹெச் … Read more

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்குக் கரோனா: சென்னையில் 590 பேருக்கு பாதிப்பு; 14,051 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,31,154. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,45,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,37,265. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 80,86,372 பேர் வந்துள்ளனர். சென்னையில் 590 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

பகுதி 2: குவாண்டம் தகவல் தொடர்பு – பாதுகாப்பான எதிர்கால தொழில்நுட்பம்

ஃபோட்டான் ஜோடி எப்படி உருவாகிறது? ஒரு ஃபோட்டான் துகளை இரண்டாக பிரிப்பதன் மூலமாக அல்லது இரண்டு ஃபோட்டான் துகள்களை இணைப்பதன் மூலமாக போட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இப்படி ஆய்வகங்களில் பல நாடுகளில் ஃபோட்டான் ஜோடிகள் உருவாக்கப்பட்டு சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பொட்டாசியம் டைட்டனைல் பாஸ்பேட் (Potassium Titanyl Phosphate -KTP) படிகத்தில் லேசர் அலைகளைச் செலுத்தினால் ஃபோட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இந்த ஃபோட்டான் ஜோடிகளை, தகவல்களைப் பாதுகாக்க சாவிகளை உருவாக்கவும் சாவிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு … Read more

'அனைவரும் சமம்' – டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்பால் ஒதுக்கப்பட்ட சிறுமியுடன் பள்ளிக்குச் சென்ற அதிபர்!

ஸ்கோப்ஜே: தென்கிழக்குஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியா நாட்டில், டவுண் சிண்ட்ரோம் மரப்பணு குறைபாடால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அவரது வகுப்புத் தோழர்களால் கிண்டல் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த அந்நாட்டு அதிபர் ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கி, அம்மாணவிக்கு ஆதரவாக அம்மாணவியுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11 வயதான எம்ப்லா அடெமி என்ற சிறுமிதான் டவுண் சிண்ட்ரோம் என்ற மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் . எம்ப்லா அடெமி தான் பயிலும் பள்ளியில் உள்ள பிற மாணவர்களால் … Read more

நோக்கியா அறிமுகம் செய்யும் 2 புதிய மொபைல்கள் 

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் புதிதாக இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய காணொலி முன்னோட்டம் ஒன்றை அந்நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தக் காணொலியில் புதிய மொபைலின் தோற்றம் இடம்பெறவில்லை. மாறாக மொபைல் அளவிலான ஒரு கோடு மட்டுமே வரையப்பட்டுத் தோன்றுகிறது. அந்த அளவை வைத்துப் பார்க்கும்போது இது நோக்கியா சி 3 மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது. இன்னொரு மொபைல், அடிப்படை வசதிகள் கொண்ட கீபேட் மொபைலாக இருக்கும் என்று தெரிகிறது. … Read more