சிவசங்கர் பாபாவுக்கு உலகத் தரத்தில் சிகிச்சை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு விஐபிகளுக்கு வழங்கப்படும் உலகத் தரத்திலான சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனையில் அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு … Read more

நேரு பிரதமராக இருந்தபோதுதான் கல்வான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியை இழந்தோம்: லடாக் பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியதாவது: மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளது. குறிப்பாக, சீனா மற்றும் திபெத் எல்லையில் வடக்கு பகுதியில் கிராமங்களை முன்னேற்ற, துடிப்பான கிராமம் திட்டம் மூலம்பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நான் திபெத், சீனா,பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பகுதியான லடாக்கை சேர்ந்தவன். அங்கு எப்போதும் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பகுதியை காங்கிரஸ் அரசுகள் பின்தங்கிய பகுதியாகவே … Read more

குழு அழைப்புகளுக்கு தனி ரிங்டோன், அனிமேட் ஆகும் ஸ்டிக்கர்கள்: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

குழு அழைப்புகளுக்குத் தனி ரிங்டோன், அனிமேட் ஆகும் ஸ்டிக்கர்கள் என அடுத்தகட்ட அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் அப் செயலியின் ஆண்ட்ராய்ட் பதிப்பில் சில புதிய அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக, வாட்ஸ் அப்பின் புதிய அம்சப் பரிசோதனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் WABetainfo இணையதளம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் 2.20.198.11 பதிப்பில் இந்தப் புதிய அம்சங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும். அசைவின்றி இருக்கும் ஸ்டிக்கர்கள் ஏற்கெனவே வாட்ஸ் அப்பில் உள்ளன. தற்போது புதிய அப்டேட்டில் அனிமேட் … Read more

’மக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?’ – அதிமுக வேட்பாளர்களை கலாய்த்த செல்லூர் ராஜு

மதுரை: “பொதுமக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?” என்று வேட்பாளர்களை பார்த்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நையாண்டி செய்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. மதுரை கே.புதூர் மாநகராட்சியில், 100 வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி பிரச்சாரம் செய்தார். இந்த பொதுக் கூட்டத்திற்கு கே.பழனிசாமி வந்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கூட்டத்தினரைப் பார்த்து எழுந்து கரோஷம் போடும்படி கூறினார். அப்போது வேட்பாளர் பலர், அவர் நம்மைப் பார்த்து சொல்லவில்லையென்று மேடையில் அமர்ந்திருந்தனர். இதைப் … Read more

’’வறுமையை வெறும் மனநிலை என்றவர்தானே!” – மாநிலங்களவையில் ராகுல் காந்தி மீது நிர்மலா சீதாராமன் விளாசல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் கடுமையாக விமர்சித்துள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2022-23 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஏழை மக்களைப் புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடிய நிலையில், மாநிலங்களவையில் இன்று பதிலுரை ஆற்றிய நிர்மலா சீதாராமன், 2013-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதை மேற்கோள் காட்டினார். அவர் பேசும்போது, “உங்களுடைய முன்னாள் தலைவர் இதே அவையில் 2013-ல் பேசும்போது வறுமை என்பது உணவு, … Read more

விபரீதத்தை தடுத்த விளையாட்டு! – 80 வயது மூதாட்டியின் உயிரைக் காத்த Wordle கேம்: ஸ்கோர் வராததால் உஷாரான குடும்பம்

சிகாகோ: மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் நபரிடம் பிணைக்கைதியாக சிக்கிக் கொண்ட 80 வயது மூதாட்டியை அவரது குடும்பத்தினர் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளது, உலகப் புகழ் பெற்ற ‘Wordle’ வேர்டில் என்ற விளையாட்டு. அது என்ன வேர்டில்? – இது ஒருவகை வார்த்தை விளையாட்டு. கடந்த ஆண்டு அக்டோபரில்தான் இது உலக அளவில் பிரபலமானது. ஓர் ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டின் சாராம்சம். சில கட்டங்களில் ஐந்தெழுத்து வார்த்தை மறைந்திருக்கும். இதை ஆறு வாய்ப்புகளில் கண்டுபிடிக்க … Read more

அமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்க்கும் டிக் டாக்

சர்வதேச அளவில் டிக் டாக்கைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 70 கோடி என்றும், இதில் 10 கோடி பேர் அமெரிக்கப் பயனர்கள் என்றும் டிக் டாக் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் டிக் டாக்கைத் தடை செய்யும் ட்ரம்ப்பின் உத்தரவை எதிர்த்து டிக் டாக் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் தங்களது சுய விவரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளது. 70 கோடி என்ற இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருக்கும். ஏனென்றால், இது ஜூலை மாதம் வரையிலான கணக்கு … Read more

கோபாலபுரம் ஸ்டைலை பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்: அண்ணாமலை தாக்கு

விழுப்புரம்: ”கோபாலபுரம் ஸ்டைலை தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்” என்று விழுப்புரம் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்தும், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் இல்லை. ஒவ்வொரு தேர்தலில் பெரிய கட்சி, பெரிய கட்சி என வாக்களித்து வாய்ப்பளித்தும் எவ்வித முன்னேற்றமும் … Read more

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினை ஆக்காதீர்: அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. … Read more

ஃபேஸ்புக் நியூஸ் மூலம் செய்தி நிறுவனங்களுக்குப் பணம்: ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் நியூஸ் வழியாக, செய்திகளைப் பிரசுரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தவுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்காவில் அறிமுகமான ஃபேஸ்புக் நியூஸ், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அடுத்த ஒரு வருடத்துக்குள் அறிமுகமாகவுள்ளது. இதுகுறித்துப் பேசியிருக்கும் ஃபேஸ்புக்கின் சர்வதேச செய்திப் பிரிவு துணைத் தலைவர் கேம்ப்பல் பிரவுன், “செய்தியின் முறைகளும், அதைப் படிக்கும் வாசகர்களின் பழக்கமும் ஒவ்வொரு தேசத்துக்கும் மாறும். எனவே ஒவ்வொரு தேசத்தின் செய்தி நிறுவனங்களுடனும் நாங்கள் இணைந்து … Read more