பிரபல பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல்.. போலீசில் பரபரப்பு புகார்..!

நாடகத்துறையில் மிகவும் சிறப்பு பெற்று விளங்கிய எஸ்.வி.சேகர், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை தயாரித்து, கிட்டத்தட்ட 5,000 முறைக்கும் மேலாக நாடகங்களை மேடையில் அரங்கேற்றி உள்ளார். 1979-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சுமார் 90-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதலால் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுகவிலிருந்து … Read more

குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவுசெய்து நாட்டுக்கு சொல்லுங்கள் – மநீம தலைவர் கேள்வி..!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய தருணம். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன். தேச நலன் கருதி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். அதே நேரத்தில் தேசப் பெருமிதத்தின் இந்த தருணம் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது. நான் எனது பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன், எங்கள் புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய … Read more

கேரளாவில் ஓட்டல் அதிபரைக் கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை..! வெளியான பகீர் பின்னணி.!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (58). இவருக்குச் சொந்தமான ஓட்டல் கோழிக்கோடு எலத்திபாலம் அருகே உள்ளது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சித்திக் மாயமாகி உள்ளார். அவரை குடும்பத்தினர் எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் விசாரணை நடத்தியதில் அவரின் அவரின் ஏடிஎம் கார்டில் இருந்து பெரிய தொகை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் பணத்திற்கு அவரை கடத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தில் போலீசார் … Read more

புல் அறுக்க சென்ற 65 வயது பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட ‘சைக்கோ’ இளைஞன்!!

ராஜஸ்தான் மாநிலம் பளி மாவட்டம் செந்த்ரா நகரில் உள்ள சாரதானா கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி தேவி (65). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் உள்ள கால்நடைக்கு புல் அறுக்க அருகில் உள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இளைஞர் சாந்தி தேவியை கடுமையாக தாக்கி கல்லால் அடித்து கொலை செய்தார். பின்னர், சாந்தி தேவியின் உடலை அந்த சைக்கோ இளைஞர் சாப்பிட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக கால்நடைக்கு புல் அறுத்துவிட்டு வீடு திருப்பிக்கொண்டிருந்த மற்றொரு … Read more

அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் – அமைச்சர் சவால்!!

தமிழ் வளர்ச்சி, மும்மொழி கொள்கை குறித்து அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் வளர்ச்சி, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றிக்கு யார் காரணம் என பேச தயாராக இருக்கிறேன், சென்னையில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அண்ணாமலையுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அண்ணாமலைக்கு … Read more

செங்கோல் சரியான இடத்திற்கு வந்துள்ளது – இளையராஜா!!

புதிய நாடாளுமன்றம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், செங்கோல் சரியான இடத்திற்கு வந்துள்ளது என்று இசைஞானி இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திறந்து வைக்கின்றனர். இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெறும் என மக்களவை செயலகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. விழாவின் முதல் பகுதியாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் … Read more

ஹிஜாபை கழட்டச் சொல்வதா? – சீமான் கடும் கண்டனம்!!

நாகையில் அரசு மருத்துவரின் ஹிஜாபை பாஜக பிரமுகர் கழட்டச் சொன்ன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வரும் அன்புச் சகோதரி ஜன்னத்தை கடந்த 24 ஆம் நாள் இரவு நேரப் பணியின்போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மருத்துவமனையில் ஹிஜாப் அணியக்கூடாது என்று மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கழற்ற வேண்டுமென கூறி பணி … Read more

ஊதியம் கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல்!!

4 மாதம் ஊதியம் வராததால் அதனை கேட்ட வடமாநில தொழிலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். ஹைதராபாத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன ஒப்பந்தம் மூலம் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு கடந்த … Read more

வவ்வால் வைரஸ் உருவாக வாய்ப்பு!! பீதியில் மக்கள்!!

சீனாவில் கொரோனா பரவிய அதே இடத்தில் வவ்வால் வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே உலுக்கிய கொரோனாவை யாராலும் மறக்க முடியாது. வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வெவ்வெறு உருமாற்றங்களில் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் உள்ளது. கொரோனா வைரஸின் ஊற்றாக கருதப்படும் சீனாவில், ஓமைக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் (XBB omicron subvariants) மீண்டும் பரவி வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் … Read more

பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா! ஏன் தெரியுமா?

பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக கலக்கி வருகிறார். நண்பன், இறைவி, மெர்சல் படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது. அதிலும் மாநாடு படம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றியை எப்படிக் கொடுத்ததோ, அதேபோல் எஸ்.ஜே. சூரியாவின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரது நடிப்பை ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகர்களே … Read more