வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து மேல்முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து, தமிழகஅரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியின்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கசான சட்ட முன்வடிவு சட்டமன்றதில் நிறைவேற்றப்பட்டது, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதன் அடுத்தக்கட்டமாக திமுக ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது. … Read more

2019 – 20ம் ஆண்டிற்கான ரூ.302 கோடி மானியத்தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு விடுவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2019 – 20ம் ஆண்டிற்கான ரூ.302 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன், மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நியாய வலை கடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.  இதற்கான தொகையை தமிழகஅரசு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் இழுபறி … Read more

உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் ஜூன் 3 ல் உலகெங்கும் ரிலீஸ்…

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் விக்ரம். கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். உலகெங்கும் ஜூன் 3 ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை திரையிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வாங்கியிருக்கிறது.

30/03/2022: தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு 56 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா உயிரிழப்பின்றி புதிதாக  39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதுடன், 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு 7.45  மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும்  இன்று 30,095   சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று ஒரே நாளில் மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 34,52,790 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த … Read more

கெஜ்ரிவால் வீடு மீது சிவப்புபெயின்டால் எச்சரிக்கை, சிசிடிவி காமிராவை அடித்துநொறுக்கிய யுவமோர்ச்சா அமைப்பினர்…. வீடியோ

டெல்லி: காஷ்மீர் பைல் படம் குறித்து டெல்லி பிரதமர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய தகவலால் எரிச்சல் அடைந்துள்ளனர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சியினர், இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து இந்துத்துவா அமைப்பான யுவமோர்ச்சா இன்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது முதல்வர் கெஜ்ரிவால் வீடு மீது தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த  சிசிடிவி காமிராவை அடித்து நொறுக்கிய துடன், அவரது வீட்டு சுவரிலும் சிவப்பு பெயின்டால் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிறுக்கி உள்ளனர். டெல்லியில் … Read more

பிரதமர் மோடியின் தினசரி பணியில் ஒன்று பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது! ராகுல் காந்தி

டெல்லி:  பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட பணிகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலை வாய்ப்பு பற்றிய ‘வெற்று’ கனவுகள் போன்றவையே இடம் பெற்றுள்ளது,  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 5மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 4 மாதங்களாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிவடைந்ததும்,  கடந்த 10 நாட்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு! மத்திய கேபினட் கூட்டத்தில் ஒப்புதல்…

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 7வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி உயர்த்த ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப் பட்டது. அத்துடன், மத்தியஅரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளத. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 … Read more

உடன் பிறப்புகளின் உணர்வையும் குழைத்து உருவாக்கப்பட்ட மாளிகை ‘டெல்லி அறிவாலயம்’! ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இயக்கத்தின் கொள்கையையும், உடன் பிறப்புகளின் உணர்வையும் குழைத்து உருவாக்கப்பட்ட மாளிகை ‘டெல்லி அறிவாலயம்’ என திமுக தொண்டர்களுக்கு, திமுக தலைவரும் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கடிதம் எழுதியுள்ளார். இதுதாடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,  வானத்தில் சிறகடிக்கும் பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அது தன் கூட்டுக்குத் திரும்பும் போதுதான் பெரும் … Read more

ஏப்ரல் 25 முதல் மே 2 வரை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பினருக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 25 முதல் மே 2 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், முதல்கட்டமாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரி … Read more

புதுவீடு கட்டும் வீட்டு உரிமையாளரை மிரட்டும் திமுக கவுன்சிலர் – வைரல் வீடியோ

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சி வந்த நிலையில், வணிகர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கவுன்சிலர்கள் பதவி ஏற்றதும், ஏரியா வாரியாக மாமூல் வசூலிக்கும் பணிகளும் அதிகரித்து வருகிறது. இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்துள்ளது. ஆனால், தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது திமுகவினர் நடத்திய அராஜகத்தை, … Read more